ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்: பயங்கரவாத அமைப்பில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்று மாலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்து கொண்ட பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில், சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர்கள் எனவும் அவர்கள், புல்வாமாவை சேர்ந்த ஐஜாஸ் ரசூல் நாசர், அபு ஹம்சா (எ) ஷாகித் அகமது என அடையாளம் காணப்பட்டனர்.

Related Stories: