ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் நவ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நேற்று மாலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்து கொண்ட பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்குதல் நடத்தினர்.