திருவள்ளூர்: சன் நியூஸ் செய்தி எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வாழவந்தான்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை சுவர் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் முன்னிலையில் இடிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை அடுத்த தச்சூர் ஊராட்சிக்குட்பட்ட வாழவந்தான்கோட்டையில் சுமார் 75 இருளர் குடும்பங்கள் 29 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சுற்றி பாஸ்கர் ராவ் என்பவர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்க முயற்சித்த பாஸ்கர் ராவ், அந்த பகுதி வழியே இருளர் இன மக்கள் செல்லக்கூடாது என்பதற்காக 7 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பினார்.