ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கரைவலையில் மீன் பிடிப்பில் ஆர்வம் கட்டி வருகின்றனர். கடலில் இருந்து மீன்கள் கூடிய வலையை கரைக்கு எழுத்துவரும்போது சோர்வு தெரியாமல் இருப்பதற்காக இந்த பாடலை படுகின்றனர். விசை படகு மீன் பிடி தொழிலுக்கு இலங்கை கடல் படையினரால் அச்சுறுத்தல் நிலவி வருவதால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்த கரைவலை மீன்பிடி முறைக்கு திரும்பியுள்ளனர் மீனவர்கள். மீன்பிடி தொழிலை தவிர வேறு எதுவும் தெரியாததால் வேறு வழியின்றி சொற்ப வருமானத்துக்கு இதில் ஈடுபடுவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.