நன்னடத்தை பிணை மீறல் ரவுடி சிறையிலடைப்பு

சென்னை: அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர், 17வது தெருவில் வசித்து வரும் கார்த்திக் (எ) லூசு கார்த்திக் (28) என்பவர் அமைந்தகரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது 4 கொலை வழக்குகள், 1 கொலை முயற்சி வழக்கு, 2 கஞ்சா வழக்குகள் உட்பட 9 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், கார்த்திக் (எ) லூசு கார்த்திக் கடந்த மே மாதம் 9ம் தேதியன்று அண்ணாநகர், துணை ஆணையர் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், கார்த்திக் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியன்று ரமேஷ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியது கைது செய்யப்பட்டார். எனவே, கார்த்திக் 238 நாட்கள், பிணையில் வர முடியாத சிறை தண்டனை விதித்து அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

Related Stories: