லக்கிம்பூர் கேரி: உத்தரபிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் மாதவ் தாண்டா என்ற இடத்தில் 16 வயது தலித் சிறுமி, அதேபகுதியை சேர்ந்த இருவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி, மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.