114வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு எடப்பாடி மாலை அணிவிக்கிறார்

சென்னை: அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15ம் தேதி அவரது சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15ம்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக தலைமை கழக செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் அதிமுக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, அதிமுகவினரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: