புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது என்று 5 எம்பிக்களின் கோரிக்கையை தேர்தல் பணிக்குழு நிராகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக். 17ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிடவில்லை என்றால், சசிதரூர் உட்பட பலர் போட்டியிட தயாராக உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி.க்களான சசி தரூர், மணிஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் பர்டோலோய், அப்துல் காலிக் ஆகிய 5 பேரும் காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு எழுதி உள்ள கடிதத்தில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்.