சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள், உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வசதியாக மாணவர்கள், பெற்றோருக்கு வழிகாட்ட முகாம்கள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர உள்ளனர். எனவே அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2021-2022ம் ஆண்டில் உயர் கல்வி படிக்க இருக்கும் மாணவர்களையும் அவர் தம் பெற்றோரையும் 7ம் தேதி முதல் 9ம் வரை பள்ளிகளுக்கு வரவழைத்து உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும். உயர்கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி பெற்ற முதன்மைப் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் தகுந்த ஆலோனைகள் மற்றும் பிற வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தகவல்கள் கொடுத்து உதவ வேண்டும்.