திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி மற்றும் சோழவரம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி மற்றும் சோழவரம் மற்றும் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளாகும். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக விட்டு விட்டு மழை கொட்டித் தீர்த்தது.