திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் டாக்டர் பூவை எம்.மூர்த்தியின் 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை எம்.ஜெகன்மூர்த்தியின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஒருங்கிணைக்கும் மாபெரும் இரு சக்கர வாகன கருஞ்சட்டை அமைதி பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் ஆயில்மில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து நடைபெற்ற கருஞ்சட்டை அமைதி பேரணிக்கு மாவட்ட தலைவர் பிரீஸ் ஜி.பன்னீர், மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, பொருளாளர் நயப்பாக்கம் டி.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகிகள் பூவை முகிலன், ஐ.ஏழுமலை, எம்.மாறன், பழஞ்சூர் பா.வின்சென்ட், முல்லை கே.பலராமன், பா.காமராஜ், டி.ருசேந்திரகுமார், மணவூர் ஜி.மகா,, கே.எம்.ஸ்ரீதர், ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். இதில் மாநில நிர்வாகிகள் பூவை ஆர்.சரவணன், பி.பரணிமாரி, தளபதி செல்வம், பூண்டி பாபு, சி.பி.குமார், வளசை எம்.தர்மன், பி.சைமன்பாபு, ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், இ.ரமேஷ், கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், என்.பி.முத்துராமன், எஸ்.ஏகாம்பரம், ஏ.கே.சிவராமன், ராக்கெட் ரமேஷ், சென்னீர் ஜி.டேவிட்ராஜ், திருமங்கலம் எம்.பி.வேதா, அ.அலெக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.