தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவையொட்டி திருத்தணியில் விழிப்புணர்வு பேரணி

திருத்தணி: தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை ஒட்டி நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ., சந்திரன் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். தேசிய ஊட்டச்சத்து மாதமாக இம்மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து திருத்தணி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச் சத்து மாத விழிப்புணர்வு ஊர்வலம்  நேற்று திருத்தணியில் நடந்தது. திருத்தணி வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செயலு தலைமை வகித்தார்.

இதில் திருத்தணி தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரன் பங்கேற்று அங்கன்வாடி மைய ஊழியர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக எம்.எல்.ஏ. முன்னிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த பேரணி திருத்தணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும் என விளம்பர பதாகைகள் கைகளில் ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர்.

Related Stories: