திருவொற்றியூர்: செங்குன்றத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (49). டேங்கர் லாரி டிரைவர். இவர், நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து வியாசர்பாடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய பாமாயில் நிரப்பிய டேங்கர் லாரியை ஓட்டிச் சென்றார். திருவொற்றியூர் டோல்கேட் அருகே சென்றபோது, டீ குடிப்பதற்காக லாரியை சாலை ஓரம் சிறிது நேரம் நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, டேங்கின் வால்வில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடியது. இதனை பார்த்த டிரைவர், வால்வு ஓட்டையை அடைக்க முயன்றார்.