சென்னை: புழல் ஏரி இரண்டு மாதங்களுக்கு பிறகு, 3 டிஎம்சி கொள்ளளவை எட்டி கடல்போல காட்சி அளிக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சி நீர் இருப்பை கொண்டுள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 3002 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவில் 90.96% தண்ணீர் தற்போது நிறைந்துள்ளது. மழைநீர் மட்டுமல்லாது, பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வினாடிக்கு 256 கனஅடிநீர் புழல் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக, ஏரியில் இருந்து 160 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.