கடையம் : கடையம் அருகே கடனாநதி அணையில் கரடி தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் மேல் பகுதியில் பாதுகாக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் வனவிலங்குகள் அணைப்பகுதிக்கு வருவது கிடையாது.