புதுடெல்லி: பயணிகளின் தகவல் கசிந்ததால், ஆகாசா விமான நிறுவனம் தனிநபர் தகவல் விதிமீறல் சிக்கலில் மாட்டி கொண்டு மன்னிப்பு கேட்டது. சமீபத்தில் மறைந்த `இந்தியாவின் வாரன் பபெட்’என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா `ஆகாசா’விமான நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் மும்பை - அகமதாபாத் முதல் விமான சேவையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே. சிங் கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தனர். இந்நிலையில், ஆகாசா விமானத்தில் பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பெயர், பாலினம், இ-மெயில் முகவரி, போன் நம்பர் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டதாக, இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவுக்கு தானாக தகவல் கிடைக்க பெற்றது.