சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் நாளை தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கை தாக்கல் செய்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 வருடங்களாக பல்வேறு தரப்பினரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.