திருவள்ளூர்: சட்ட விரோதமாக கால்நடைகளை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. பா.சிபாஸ் கல்யாணிடம், சிவசேனா கட்சிபின் மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதன் விவரம் வருமாறு, சமீப காலமாக தமிழகத்தில் இருந்து மாடுகள் அண்டை மாநிலத்திற்கு விதிமுறைகளை மீறி கடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர எல்லை வழியாக கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடந்து வருகிறது. இது போன்ற கால்நடைகளை வாகனங்களில் கடத்தி செல்பவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்களாகவும், மாற்று மதத்தை சார்ந்தவர்களாகவும் உள்ளார்கள்.