கூடலூர்: மழையால் குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தை போலீசார் அகற்றி சாலை போக்குவரத்தை சீர்செய்தனர். தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளியானது தேனி - கொல்லம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இங்குள்ள லோயர் கேம்ப்பிலிருந்து ஆறு கிமீ தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலை செல்கிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்வதற்கு கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி என மூன்று வழித்தடங்கள் இருந்தாலும், பயணியர் மற்றும் சரக்கு வாகனங்கள் குமுளி மலைச்சாலை வழியாகவே செல்கின் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.