மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி: ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் செல்ல உள்ளதாக தகவல்..!

டெல்லி: மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாடு செல்கிறார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால், கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது; சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் எனவும், அவர் இந்தியா திரும்பும் முன் உடல் நலம் சரியில்லாத அவரது தாயாரை சந்தித்துவிட்டு வருவார் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் பயணிக்கவுள்ளனர் என்று கூறினார்.

Related Stories: