வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாரப்படும் என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாலாஜாபாத் பேரூராட்சியின் மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் இல்லா மல்லி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது, பேரூராட்சியின் வரவு, செலவு குறித்த அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் என்னென்ன பணிகள் செய்வது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.