புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் பிரதான ஏவுகணையாக பிரம்மோஸ் ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணைகளில் ஒன்று, கடந்த மார்ச் 9ம் தேதி தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று விழுந்தது. இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டது. இதில், ஏவுகணையை செலுத்துவதற்கான நிலையான இயக்க விதிமுறைகளை விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பின்பற்றவில்லை என்று தெரிய வந்தது.