திருவள்ளூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் நினைவிடத்திற்கு வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தருகிறார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடைபாதை யாத்திரை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ராகுல் காந்தி வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வடக்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான வழக்கறிஞர் வி.இ.ஜான் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஜெ.டி.அருள்மொழி, பூண்டி ஆர்.ராஜா, பி.ரமேஷ், ஏ.எஸ்.சிவா ரெட்டியார், எஸ்.சரஸ்வதி, டி.வடிவேலு, வி.எஸ்.ரகுராமன், ராமன், சி.வெங்கட்ராஜ், இருதயராஜ், லோகநாதன், விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில துணை தலைவர் டி.எஸ்.சதாசிவலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.