சென்னை : சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் மீட்கப்பட்ட 31.700 கிலோ நகைகளின் விவரங்களை காவல்துறையினரால் தற்போது வெளியிடப்பட்டது. அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் கடந்த வாரம் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை அடுத்து 10கிலோ, மற்றும் நேற்று ஆய்வாளர் வீட்டில் மூன்றரை கிலோ, இன்று இரண்டரை கிலோ என்று ஒரு தோராயமாக பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் கணக்குகளை காவல்துறை தகவலாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கொள்ளையடித்த தங்க நகைகளின் அளவிலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் அளவிலும் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில், உண்மையாக கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எவ்வளவு என்ற சந்தேகம் நீடித்து வந்தது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் 31.700 கிலோ நகைகள் 481 கவர்களில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். கொள்ளைபோன தங்கங்கள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. குற்றவாளி சந்தோஷிடம் 15ஆம் தேதி 15.951 கிலோ தங்க நகைகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டது. குற்றவாளி பாலாஜியிடம் இருந்து யமாஹா 0.063 கிராம் தங்க காய் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.