வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா; உலக அமைதிக்காக இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும்: தமிழக ஆளுநர் பேச்சு

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணை தலைவர்கள்  சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குனர்  சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி சங்கர் விசுவநாதன்,  துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் நாராயணன் முன்னிலை வகித்தனர்.

அமெரிக்க நாட்டின் சென்னைக்கான துணை தூதர் ஜூடிக் ராவின் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு  மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பின்  இயக்குனர் சேதுராமன் பஞ்சநாதனுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ  டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: விஐடி மிகச் சிறந்த கல்வி நிறுவனம், பல வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளது. இங்கு பயிலும் மாணவர்களாகிய உங்களின் கனவுகள் வெற்றியடையும். கடினமாக உழைத்தால் விஐடி வேந்தர்போல, நீங்களும் வாழ்க்கையில் உயரலாம். இந்தியாவில் முதல் ஐந்து இடத்தில் விஐடி பல்கலைக்கழகம் இருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல சர்வதேச அளவிலும் விஐடி கல்வி நிறுவனம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க ேதசிய அறிவியல் அமைப்பின் இயக்குனராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா- அமெரிக்க நட்புறவு நீண்ட வரலாறு கொண்டது. இரண்டு நாடுகளும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்போது ஒரு நாடு உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  உலக அமைதிக்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். உலக அமைதிக்கு இந்த இரு நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமாக உள்ளது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில்  புதிய சிந்தனையுள்ள 400 தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் தற்போது 80ஆயிரம் தொழிற் நிறுவனங்களாக உயர்ந்துள்ளது. 750 பள்ளி மாணவர்கள் இணைந்து 75 செயற்கைக்கோள்களை உருவாக்கி உள்ளனர். இது எல்லாம் நம் நாட்டில் தான் நடக்கிறது. பள்ளி அளவிலேயே மாணவர்கள் புதிய சிந்தனைகளை கொண்டுள்ளனர். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களால் முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வளர வேண்டும்.

150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கி உள்ளோம். கொரோனா பாதிப்பின் போது இந்தியா 200 கோடி தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்கியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக பங்களிப்பு உள்ளது. இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பது இல்லாத நிலை உள்ளது. இது உலக அளவில் நம்மை திரும்பி பார்க்க செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அமெரிக்க நாட்டின் துணை தூதர் ஜூடித் ராவின் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:

இந்திய அளவில் விஐடி தற்போது 3வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 600 முதல் 700வது இடங்களில் இருக்கிறோம். இதுபோதாது. உலக அளவில் முதல் 200 இடங்களில் பிடிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். மாணவர்கள் கல்வி கற்க பெற்றோர்கள் பணம் செலுத்துகின்றனர். ஏழை மக்கள் உயர் கல்வி கற்பதில் சிரமம் உள்ளது. அனைத்து நாடுகளும் உயர் கல்வியில் கவனம் செலுத்துகின்றன. உயர் கல்வியை 30 நாடுகள் இலவசமாக வழங்குகின்றன. அவர்கள் அறிவியல், ெதாழில்நுட்பத்தில் முன்ேனறிச்செல்கின்றனர்.

இந்தியாவில் கேரளா கல்விக்கு அதிகம் செலவு ெசய்கிறது. கல்வி செலவு செய்வதில் கடைசி இடத்தில் பீகார் உள்ளது. 2011 கணக்கெடுப்பின்போது 14 கோடி மாணவர்கள் உயர்கல்வி கற்க தகுதியானவர்களாக இருந்தனர். தற்போது மூன்றரை கோடி பேர் தான் படிக்கின்றனர். இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். கல்விக்கு அதிகமாக செலவழித்தால் தான் நாம் முன்னேற முடியும். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விஐடி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் 84 நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

Related Stories: