சென்னை: சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள சமையல் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயால் அருகில் உள்ள இதர கிடங்குகளுக்கு பரவியதில் பலகோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம் செய்யப்பட்டது. மிஸ்டர் கோல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான குடவுனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் அருகில் இருந்த பிளைவுட் மற்றும் டைல்ஸ் தயாரிக்கும் கடைகளுக்கு பரவியது. இதனால், தகவல் அறிந்த கோயம்பேடு மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீ அணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.