மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் நேற்று 60,000ஐ தாண்டியது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப பங்குச்சந்தைகளில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே துவங்கியது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 417.92 புள்ளிகள் உயர்ந்து 60,000 புள்ளிகளை தாண்டி 60,260.13 ஆனது.