டெல்லி: 3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5 சதவீதம் மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் அளிக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால் சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2 முறை வட்டி விகிதங்களை அதிகரித்தது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாண்டு வட்டிக்கு மானியம் அளிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக ஒரு மானியத்தை அளிக்க முடிவு செய்யும் போது அதற்கான ஒதுக்கீட்டையும் அரசு முடிவு செய்கிறது.