தாம்பரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் இருந்தனர். அதேபோல பெருங்களத்தூர் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் டி.காமராஜ் தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.