பவள விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.பாரதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சென்னை: பவள விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளரும், திமுக முன்னோடிகளில் ஒருவருமான ஆர்.எஸ்.பாரதியின் பவள விழாவையொட்டி நேற்று சென்னை, நங்கநல்லூர் தில்லைகங்கா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் எ.வ.வேலு, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சாயி ஜெய்காந்த் மற்றும் ஆர்.எஸ்.பாரதியின் குடும்பத்தார் உடனிருந்தனர்.

Related Stories: