சென்னை: குத்துக்கல்வலசையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் சுதந்திர தின பவள விழாவையொட்டி 75 காசுகளுக்கு சிக்கன் பிரியாணி விற்கப்படும் என சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மக்கள் 50 பைசா மற்றும் 25 காசு நாணயங்களுடன் நேற்று காலை 10 மணி முதல் சம்பந்தப்பட்ட கடை முன்பாக குவியத் துவங்கினர். நேரம் செல்லச்செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்டவரிசையில் காத்திருந்து காலை 11 மணிக்கு விற்பனை துவங்கியதும் 50 காசு நாணயம் மற்றும் 25 காசு நாணயம் என மொத்தம் 75 காசுகளை கொடுத்து ஒருவருக்கு ஒரு பிரியாணி வீதம் வாங்கிச்சென்றனர்.