சென்னை: அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது, பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளதாக பழனிசாமி குறித்து மறைமுகமாக கூறினார்.