திருவொற்றியூர்: திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே நேற்று காலை நடைபெற்ற திருமணத்திற்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்த ஏராளமானோர் வந்தனர். திருமணம் முடிந்ததும் உறவினர்கள் சிலர் மதியம் எண்ணூர் கடற்கரைக்கு வந்தனர். பின்னர் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது சகினாபி (48) என்ற பெண், மற்றும் 2 சிறுவர்கள் ராட்சத அலையில் சிக்கினர்.