மெட்ரோ ரயில் நிலையங்களில் 75-வது சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்:மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 75-வது சுதந்திர தின கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 4 நாள் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கிராமிய காலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். கரகாட்டம், காவடியாட்டம், துப்பாட்டம்,சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர். 

Related Stories: