பூந்தமல்லி: போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். போரூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (68). விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா (65). இவர்களது மகன் பாலச்சந்தர் ஆஸ்திரேலியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் நவநீதகிருஷ்ணன் வேலைக்கு சென்றுவிட்டார். சத்தியபாமா, வீட்டை பூட்டிவிட்டு போரூரில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். மதியம் வீட்டுக்கு வந்தபோது, கிரீல் கேட் மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.