புழல்: செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பெரியார் நகரில் ஒரு தனியார் பாட்டில் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 18க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர். இவர்களுடன் அதே மாநிலத்தை சேர்ந்த திரேந்திர திஸ்வால் (35) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி காயத்ரி பிஸ்வால்(32). கடந்த சில மாதங்களாக திரேந்திர திஸ்வால் ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை. இதனால், குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கணவன் - மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தரேந்திர திஸ்வால், அருகில் இருந்த கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார்.