திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம், ராமதண்டலம் கிராமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் உத்தரவின்பேரில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சில்ரன் பிலீவ் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சங்கீதா உளவள ஆலோசகர் ஜான்சி, ராமதண்டலம் ஊராட்சி மன்ற தலைவி சுமதி சிவதாஸ், வார்டு உறுப்பினர்கள் தட்சிணா மூர்த்தி, ஞான சுந்தரி, பூவேந்தன், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன், கள ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமிற்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர், மூத்த உரிமையியல் நீதிபதி சாண்டில்யன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும்பொழுது, `சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு உதவி செய்கிறது.