சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர் கைது சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனிடையே இலங்கையின் முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.