புதுடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்றுடன் ஓய்வு பெற்றார். புதிய துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான வெங்கயைா நாயுடு, கடந்த 2017ம் ஆண்டு, ஆகஸ்ட் 11ம் தேதி நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார். நேற்றுடன் அவர் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். மாநிலங்களவை தலைவராகவும் அவர் இருந்தார். நேற்றுடன் தனது பணிகளை முடித்துக் கொண்ட அவர், நாடாளுமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி நடந்த புதிய துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றிப் பெற்றார்.
நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக இன்று அவர் பதவி ஏற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.