சென்னை: மாமல்லபுரத்தில் மொகரம் பண்டிகை விடுமுறையை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். அவர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியில் திளைத்தனர். நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை கடந்த 5ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை கட்டணமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதையடுத்து, மொகரம் விடுமுறை தினமான நேற்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்நாட்டு பயணிகள் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.