செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மின்சாரம் தாக்கி ஆண்மயில் ஒன்று பரிதாபமாக பலியானது. செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் நிறைய மலைப்பகுதிகள் உள்ளன. இங்கு குரங்குகள், மயில் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பகுதிகளில் போதுமான இரை மற்றும் தண்ணீர் கிடைக்காததால் மயில்கள் கூட்டம்கூட்டமாக சென்னேரி சுற்றியுள்ள மலைகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும், மாலை நேரங்களில் அருகில் உள்ள வயல்களில் நெல்கதிர்களை உண்டு வாழ்கின்றன. இந்நிலையில், ஆண் மயில் ஒன்று அப்பகுதியில், கருகிய நிலையில் இறந்து கிடந்தது. அதைகண்ட ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.