சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து பேசினார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஆளுனருடன் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நேர்மை, தமிழர்களின் கடின உழைப்பு, அவர்களின் ஹானஸ்டியை பிடித்திருப்பதாக ஆளுநர் கூறினார்.