வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம்..!

டெல்லி: நாளை மறுநாளுடன் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது அப்போது அங்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி; பாஜக தலைவராக, எம்பியாக, மத்திய அமைச்சராக, துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு செயல்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி நிறையில் அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். மாநிலங்களவைக்கு இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் ஆகும்.

மாநிலங்களவையின் பல வரலாற்றுத் தருணங்கள் வெங்கையா நாயுடுவின் அழகான செயல்பாடுகளும் தொடர்புடையவை ஆகும். வெங்கையா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும்; அவரின் சாமர்த்தியத்திற்கு நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். துணை ஜானாதிபதி வெங்கையா நாயுடு மிகவும் புத்திசாலித்தனமாக பேசக் கூடியவர். அனைத்து மொழிகளிலும் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் அற்புதமானவை. இளைஞர்களுடன் வெங்கையா நாயுடுவுக்கு நல்ல புரிதல் உள்ளது. எல்லா திட்டங்களையும் மேம்படுத்துவதற்கு சிறப்பான ஆலோசனைகளை வழங்கியவர் வெங்கையா.

கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் அனைத்து பொறுப்புகளை சிறப்பாக கையாண்டவர் வெங்கையா. எந்த தருணத்திலும் சூழலுக்கு ஏற்ப செயல்படுவதில் திறன் படைத்தவர் வெங்கையா இவ்வாறு பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: