தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கும் சிலர், மொத்தமாக சேகரித்து, அதை ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, வடசென்னை பகுதிகளான கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளை போல் அரிசி மூட்டைகளை ரயில் மூலம் கடத்தி செல்கின்றனர். ரயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி, அவ்வப்போது இந்த கடத்தல் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.