சென்னை: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறந்த ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நடைபெற்று வருகிறது. இதில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் அருண் மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது மாநில மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதலமைச்சர் வெளியிட்டார். பின்னர் நடைபெற்ற விழாவில், ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்.