கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே செம்பேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் குமார் (31) கடந்த 3ம் தேதி இரவு பாடியநல்லூரில் இருந்து தேர்வாய் செல்லும் சாலையில் லாரியில் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் லாரியை வழிமறித்தனர். டிரைவர் குமாரை கத்திமுனையில் மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ. 13 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.