சென்னை: பறவை முன்னோடி திட்டம் மூலம் 15 இளம் குற்றவாளிகளுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சியின் முதல் பயிற்சி வகுப்பினை போக்குவரத்து நிறுவன இயக்குநர் ரங்கநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை: முதன் முறையாக சிறு குற்றம் புரியும் 24 வயதிற்குட்பட்ட இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் இந்த பறவை முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காவல் துறையுடன் தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக தரமணியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தின் கீழ் 15 இளம் குற்றவாளிகளுக்கு இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் உரிமம் பெற நேற்று காலை 12 மணியளவில் முதல் நாள் பயிற்சியை போக்குவரத்து நிறுவன இயக்குநர் ரங்கநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மைய இணை இயக்குநர் அனிதா மற்றும் காவல் அதிகாரிகள் உடன்இருந்தனர்.