திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.15 அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளில் 4 மதகுகள் வழியாக மட்டுமே உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.