வரும் 29ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா: பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்க திட்டம்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முன்னோட்டமாக  5 மாநில தேர்தல் நடைபெற்றது.  பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை நடத்த பாஜக தீவிரம் காட்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழக பாஜகவின் சார்பில் திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக பாஜக மாவட்ட அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனை திறந்து வைக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 29ம் தேதி ஒருநாள் பயணமாக கோவை வருகிறார். அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலமாக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கிறார். அமித்ஷாவின் வருகையின் போது பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: