சென்னை: மின்கட்டணம், மின்விநியோகம் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பிறகு அவர் அளித்த பேட்டி: சமூக வலைதளங்களில் சில பதிவுகள் மோசமாக இருக்கிறது. அதிமுக நிர்வாகி ஒருவர் தொடர்ந்து ஒரு மாதகாலமாக சமூக வலைதளத்தில் மின்னகத்திற்கு தொடர்பு கொண்டேன் என்று கூறி வந்தார். அதற்கு நான் உங்களது செல்போன் எண் கொடுங்கள் என்று கூறினேன். அவர் தரவில்லை, சர்வீஸ் எண் மட்டும் கொடுத்தார்.