மதுரை: கலைப்புலி தாணு உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடைபெற்று வரக்கூடிய வருமானவரித்துறை சோதனை 2வது நாளாக நீடிக்கிறது. டெல்லியில் இருந்து 3 பேர் கொண்ட குழு விசாரணைக்கு வந்திருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜாவை தவிர, மதுரையை சேர்ந்த பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் முகாமிட்டு 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சினிமா படங்களுக்கு முதலீடு செய்ததில் வரிசெலுத்தாமல் முறைகேடு செய்த புகாரின் அடிப்படையில் இவர்களது இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.